வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

பாபநாசம் அணை நீர்மட்டம் 70 அடியாக உயர்ந்தது

பாபநாசம் அணை நீர்மட்டம் வியாழக்கிழமை 70.60 அடியாகவும், சேர்வலாறு அணை நீர்மட்டம் 84.51 அடியாகவும் உயர்ந்துள்ளது.

News image
Updated On :1 நவம்பர் 2012, 3:40 pm

ஷேக் அப்துல்காதர்

பாபநாசம் அணை நீர்மட்டம் வியாழக்கிழமை 70.60 அடியாகவும், சேர்வலாறு அணை நீர்மட்டம் 84.51 அடியாகவும் உயர்ந்துள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்த மழையால் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. கடந்த 3 நாள்களாக மழை இல்லாததால் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்து காணப்படுகிறது.

வியாழக்கிழமை காலை நிலவரப்படி பாபநாசம் அணையில் 15 மி.மீ., பாபநாசம் கீழ் அணையில் 1 மி.மீ., சேர்வலாறு அணையில் 5 மி.மீ., மணிமுத்தாறு அணையில் 12.2 மி.மீ. மழை பதிவானது.

பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 780.67 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணை நீர்மட்டம் 1.20 அடி உயர்ந்து 70.60 அடியாக இருந்தது.

சேர்வலாறு அணை நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 84.51 அடியாகவும், மணிமுத்தாறு  அணை நீர்மட்டம் 60.40 அடியாகவும் இருந்தது. மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 161 கனஅடி நீர்வரத்து இருந்தது. கடனாநதி அணை நீர்மட்டம் 73.60 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 81.50 அடியாகவும் இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.