இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கடலூரில் அமைச்சர் உள்ளிட்ட 4 எம்எல்ஏக்களுக்கு மடிக்கணினி

கடலூர் மாவட்டத்தில் உள்ள எம்எல்ஏக்களுக்கு மடிக்கணினி வழங்கும் விழா இன்று கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

News image
Updated On :3 நவம்பர் 2012, 7:36 am

சீனிவாசன்

கடலூர் மாவட்டத்தில் உள்ள எம்எல்ஏக்களுக்கு மடிக்கணினி வழங்கும் விழா இன்று கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

தமிழக சட்டப்பேரவையில் அனைத்து எம்எல்ஏக்களுக்கும் மடிக்கணினி வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்தபடி, எம்எல்ஏக்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் பணி மாவட்ட ஆட்சியர்களின் வாயிலாக நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், இன்று கடலூர் மாவட்டத்தில் உள்ள எம்எல்ஏக்களுக்கு மடிக்கணினி வழங்கும் விழா ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் எம்.பி. சம்பத் (அதிமுக) குறிஞ்சிப்பாடி, சொரத்தூர் எம்எல்ஏ ரா. ராஜேந்திரன்(அதிமுக), நெய்வேலி எம்எல்ஏ எம்.பி.எஸ். சிவசுப்ரமணியன் (அதிமுக), புவனகிரி எம்எல்ஏ செல்வி ராமஜெயம் (அதிமுக),  சிதம்பரம் எம்எல்ஏ பாலகிருஷ்ணன் (சிபிஎம்) ஆகியோருக்கு மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ மடிக்கணினிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 3 தேமுதிக எம்எல்ஏக்கள் கலந்து கொள்ளாமல் நிகழ்ச்சியை புறக்கணித்துவிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.