இதை அடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது, இருப்பினும் அவரது உடல் நிலை சரியாகவில்லை. இந்நிலையில் அரசு மருத்துவமனையியில் சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த நேற்று முன் தினமே இறந்துவிட்டதாகத் தெரிந்தது. ஆனால், மாணவிகள் பிரச்னையில் ஈடுபடவே, இன்னும் சிகிச்சையில் இருக்கிறார் என்று மாற்றிச் செல்லப்பட்டதாம் இந்நிலையில், தீபாவளி விடுமுறையை ஒட்டி, மாணவிகள் பலரும் தங்கள் ஊர்களுக்குச் செல்லவே, விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை 7மணி அளவில் அவர் இறந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். இதை அடுத்து, மருத்துவர்கள், மாணவிகள் அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.