தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

பைக் சைலன்ஸர் மீது பட்டாசு பட்டு வெடித்தது: 3 பேர் காயம்

நாகப்பட்டினம் அருகே இரு சக்கர வாகனத்தில் பட்டாசுகளை வாங்கி பெட்டியில் கட்டி வைத்து எடுத்துச் சென்றபோது, வண்டியின் சைலன்ஸரில் பட்டு, வெப்பத்தால் பட்டாசுகள் வெடித்து 3 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

News image
Updated On :12 நவம்பர் 2012, 7:35 am

சங்கர்

நாகப்பட்டினம் அருகே இரு சக்கர வாகனத்தில் பட்டாசுகளை வாங்கி பெட்டியில் கட்டி வைத்து எடுத்துச் சென்றபோது, வண்டியின் சைலன்ஸரில் பட்டு, வெப்பத்தால் பட்டாசுகள் வெடித்து 3 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி அருகே காரைக்கால் மாவட்டத்தில் இருந்து பட்டாசுகளை வாங்கிக் கொண்டு, இரு சக்கர வாகனத்தில் 3 பேர் எடுத்துச் சென்றனர். அவர்கள் தரங்கம்பாடி உப்பனாறு பாலத்தில் வந்தபோதுபோது, பக்கவாட்டில் மாட்டி வைத்திருந்த பட்டாசு பெட்டிகள், வண்டியின் புகை போக்கும் சைலன்ஸரில் பட்டது. அதனால் வெப்பமடைந்து, பட்டாசுகள் அதிக சத்தத்துடன் வெடித்தன. இந்த வெடிவிபத்தில் பைக்கில் சென்ற 3 பேர் காயம் அடைந்தனர். இதில் வண்டியும் லேசாக எரிந்தது.

இது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைக் கண்ட பொதுமக்கள், வண்டி சைலன்ஸரில் படும்படியாக பட்டாசுகளை எடுத்துச் செல்ல வேண்டாம் என்று போவோர் வருவோரிடம் கூறிக் கொண்டிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.