எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

காரைக்காலில் ரயில் சேவையை மேம்படுத்த மத்திய அமைச்சர் நாராயணசாமியிடம் வலியுறுத்தல்

காரைக்காலில் ரயில் சேவையை மேம்படுத்த சீரிய கவனம் செலுத்துமாறு மத்திய இணை அமைச்சர் வி.நாராயணசாமியிடம் வலியுறுத்தப்பட்டது.

News image
Updated On :18 நவம்பர் 2012, 10:39 am

செல்வ முத்துகுமாரசாமி

காரைக்காலில் ரயில் சேவையை மேம்படுத்த சீரிய கவனம் செலுத்துமாறு மத்திய இணை அமைச்சர் வி.நாராயணசாமியிடம் வலியுறுத்தப்பட்டது.

காரைக்காலில் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க பிரதமர் அலுவலக இணை அமைச்சர் வி.நாராயணசாமி சனிக்கிழமை காரைக்கால் வந்தார். காரைக்கால் ரயில் உபயோகிப்பாளர் நலச் சங்கத் தலைவர் எல்.எஸ்.பி.சோழசிங்கராயர் சந்தித்து அளித்த கோரிக்கை மனு விவரம் :

காரைக்கால் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு எந்தவித அடிப்படை வசதியும் மேம்படுத்தப்படாமல் சேவை தொடங்கி ஓராண்டு நிறைவடையவுள்ளது. குறிப்பாக பயணிகளுக்கு கழிப்பறை வசதி இல்லை. பயணிகள் தங்களது வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்திச் செல்வதற்கு எந்த வசதியும் இதுவரை ஏற்படுத்தவில்லை. வெளியூருக்கு செல்வோர், தொலைதூரத்திலிருந்து வந்து இறங்குவோர் பயனடையும் வகையில் கேண்டீன் வசதியும் அமைக்கப்படவில்லை.

திருச்சிக்கும், தஞ்சாவூருக்கும் தினசரி 2 பயணிகள் ரயில் செல்லும் நிலையில், ஒரு டிக்கெட் கவுன்டர் மட்டுமே இருப்பதால், பயணிகள் நீண்ட வரிசையில் நிற்கவேண்டியுள்ளது. கூடுதல் கவுன்டர் செயல்படும் வகையில் அமைப்பு இருந்தும், உரிய ஊழியர் நியமித்து செயல்படுத்த ரயில்வே நிர்வாகம் முனைப்பு காட்டவில்லை.

காரைக்கால் அருகே உள்ள திருமலைராயன்பட்டினத்தில் நிலையம் இருந்தும், பயணிகள் ரயில் நின்று செல்லவில்லை. இதனால் அப்பகுதியினர் கடும் அவதியுறும் நிலை ஏற்பட்டுள்ளது. பயனற்ற நிலையம், சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருவது கவலையளிக்கக்கூடியதாக உள்ளது.

உடனடியாக இந்த அடிப்படை தேவைகளை சீர்செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும். தொடர்ந்து, நாகூரிலிருந்து செல்லும் பயணிகள் ரயில்களை, ரயில்வே பட்ஜெட்டில் ஏற்கெனவே அறிவித்தவாறு  காரைக்காலில் இருந்து இயக்க விரைவான நடவடிக்கை எடுக்கவேண்டும். ரயில்வே நிர்வாகத்தின் கவனத்தை ஈர்க்க மத்திய அமைச்சர் சீரிய கவனம் செலுத்தவேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.