வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 10 அடி உயர்வு: பாபநாசம் அணை பகுதியில் அதிகபட்சம் 150 மி.மீ மழை

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்புபகுதியில் பெய்த பலத்த மழையினால் ஒரே நாளில் சேர்வலாறு அணையின்

News image
Updated On :25 நவம்பர் 2012, 4:54 am

ஷேக் அப்துல்காதர்

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு
பகுதியில் பெய்த பலத்த மழையினால் ஒரே நாளில் சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 10.17 அடியும், கடனாநதி, ராமநதி அணைகளின் நீர்மட்டம் தலா 3
அடியும் உயர்ந்துள்ளது. பாபநாசம் அணையில் அதிகபட்சம் 150 மி.மீ மழை பெய்துள்ளது.

தாமிரவருணி பாசனத்தில் பிசான பருவ சாகுபடி பணிகள் தொடங்கியுள்ள நிலையில் கடந்த சில தினங்களாக மழை இல்லை. இப்பருவமும் பொய்த்து விடுமோ என அச்சம்
விவசாயிகளிடையே எழுந்துள்ளது. இந்நிலையில் சனிக்கிழமை திருநெல்வேலி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. மேற்குத் தொடர்ச்சி மலையில் அணைகளின்
நீர்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்தது.

ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி பதிவான மழை: பாபநாசம் அணையில் அதிகபட்சம் 150 மி.மீ, பாபநாசம் கீழ் அணையில் 113 மி.மீ, சேர்வலாறு அணையில் 110 மி.மீ, மணிமுத்தாறு அணையில் 139.2 மி.மீ, கடனாநதி அணையில் 34 மி.மீ, ராமநதி அணையில் 10 மி.மீ, அம்பாசமுத்திரத்தில் 25.3 மி.மீ  சேரன்மகாதேவியில் 39 மி.மீ. நீர்வரத்து கணிசமாக அதிகரிப்பு: மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த பலத்த மழையினால் அணைகளின் நீர்வரத்து கணிசமாக
அதிகரித்துள்ளது. பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 2237.37 கனஅடியும்,மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 496 கனஅடியும், கடனாநதி அணைக்கு விநாடிக்கு 280 கனஅடியும், ராமநதி அணைக்கு விநாடிக்கு 145.69 கனஅடியும் நீர்வரத்து இருந்தது.

சேர்வலாறு அணை 10 அடி உயர்வு: பாபநாசம் அணையின் நீர்மட்டம் 1.25 அடி உயர்ந்து 71.80 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 10.17 அடி உயர்ந்து 85.46 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 0.80 அடி உயர்ந்து 63.70 அடியாகவும், கடனாநதி அணையின் நீர்மட்டம் 3 அடி உயர்ந்து 70.00 அடியாகவும், ராமநதி அணையின் நீர்மட்டம் 3 அடி உயர்ந்து 70.00
அடியாகவும் இருந்தது.

பாபநாசம் அணையில் இருந்து 600 கனஅடியும், கடனாநதி அணையில் இருந்து 30 கனஅடியும், ராமநதி அணையில் இருந்து 45 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததால் அணைகளில்
இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.