வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

திரையரங்கு அருகே இளைஞர் மர்மச் சாவு

கல்லிடைக்குறிச்சியில் வெள்ளிக்கிழமை நேற்று திரையரங்கு அருகே மர்மமான முறையில் இளைஞர் ஒருவர் இறந்து கிடந்தார்.

News image
Updated On :6 அக்டோபர் 2012, 5:09 am

ஷேக் அப்துல்காதர்

கல்லிடைக்குறிச்சியில் வெள்ளிக்கிழமை நேற்று திரையரங்கு அருகே மர்மமான முறையில் இளைஞர் ஒருவர் இறந்து கிடந்தார்.

கல்லிடைக்குறிச்சி வைராவிகுளம் செல்லும் சாலையில் திரையரங்கு உள்ளது. திரையரங்கு அருகில் வெள்ளிக்கிழமை இரவு சுமார் 38 வயது மதிக்கத்தக்க இளைஞர் இறந்து கிடந்தது தெரியவந்தது. தகவலறிந்த கல்லிடைக்குறிச்சி போலீஸார் சென்று சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

காவி நிற வேஷ்டியும், வெள்ளை நிற சட்டையும் அணிந்திருந்தார். அவரது சட்டப்பையில் வெற்றிவேல் என பெயர் எழுதப்பட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சீட்டு இருந்தது. அவர் எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. விஷம் குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என போலீஸார் தெரிவித்தனர்.

கிராம நிர்வாக அலுவலர் அப்துல்ரகுமான் புகாரின்பேரில் கல்லிடைக்குறிச்சி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.