இந்நிலையில், இது குறித்த செய்திகளுக்கு விடையளிக்கும் விதமாக, நித்தியானந்தா இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுவார் என்று கூறப்பட்டது. ஆனால், அவர் அதைத் தவிர்த்துவிட்டார். இதனால், சில தொலைக்காட்சி ஊடகங்களைச் சேர்ந்த செய்தியாளர்கள் நித்தியானந்தாவைச் சந்தித்து விளக்கம் பெறா முயற்சி செய்தனர். ஆனால், நித்தியானந்தாவின் சீடர் பரமானந்தா வெளியில் வந்து, நித்தியானந்தர் இன்று சந்திக்க வாய்ப்பில்லை. நாளை அல்லது நாளை மறுநாள் நித்தியானந்தர் உங்களை சந்திப்பார். மேலும் ஆதீனம் இது குறித்து விளக்கம் அளிப்பார் என்றார்.