நிலப் பிரச்னையில் அண்ணன் தம்பிக்குள்ளே ஏற்பட்ட தகராறில், அண்ணன் துப்பாக்கியால் சுட்டதில் தம்பி படுகாயம் அடைந்தார்.
சேலம் மாவட்டம் மேச்சேரியை அடுத்த பூணாண்டியூரைச் சேர்ந்தவர் சம்பத். இவருக்கும் இவரின் தம்பி கருணாகரனுக்கும் நிலம் தொடர்பாக பிரச்னை இருந்துள்ளது. இந்நிலையில் இன்று மாலை நிலத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த கருணாகரனை அங்கே திடீரென வந்த சம்பத் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் தோள்பட்டையில் படுகாயம் அடைந்த கருணாகரன் சேலம் மருத்துவமனையில் உடனடியாகச் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக மேச்சேரி போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.