இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கடலூர் துறைமுக முன்னெச்சரிக்கை நடவடிக்கை: டிஐஜி பார்வையிட்டார்

கடலூர் துறைமுக கடற்கரையோர கிராமப் பகுதியில் விழுப்புரம் சரக டிஐஜி சண்முகவேல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பார்வையிட்டார்.

News image
Updated On :31 அக்டோபர் 2012, 6:22 am

சீனிவாசன்

கடலூர் துறைமுக கடற்கரையோர கிராமப் பகுதியில் விழுப்புரம் சரக டிஐஜி சண்முகவேல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பார்வையிட்டார்.

கடலூர் துறைமுகப் பகுதிக்கு டிஐஜி சென்ற போது துறைமுக பாதுகாப்பு அதிகாரி அன்பரசன் உடன் இருந்தார்.

வங்கக் கடலில் உருவாகியுள்ள நிலம் புயல் சின்னம் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் பலத்த மழை மற்றும் காற்று வீசி வருகிறது. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கடலூர் துறைமுகத்தில் நேற்று மாலை 5ம் எண் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது. அதே நிலை இன்று காலை வரை நீடிக்கிறது. காலை முதல் சாரல் மழையும், குளிர்ந்த காற்றும் வீசுகிறது. கடலூர் கடற்கரையோரங்களில் கடல் சீற்றமாகக் காணப்படுகிறது.

4வது நாளாக தொடர்ந்து இன்றும் கடலூர் பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. பலத்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.

புயலால் பாதிக்கப்படும் மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில், பள்ளிகளும், திருமண மண்டபங்களையும் மாவட்ட நிர்வாகம் தயார் படுத்தி வைத்துள்ளது.  உணவு வழங்கவும் உணவுப் பொருட்களை இருப்பு வைத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.