இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பண்ருட்டி ஊராட்சி மன்றக் கூட்டத்தில் வாக்குவாதம்: கண்டித்து தர்ணா

பண்ருட்டி, செப்.5: பண்ருட்டி ஊராட்சி ஒன்றியக் கூட்டத்தில் ஊராட்சிக் குழுத் தலைவரின் அராஜகப் போக்கைக் கண்டித்து துணைத் தலைவர் சிவசங்கரி தலைமையில் ஊராட்சி மன்ற அலுவலக வாயிலில் அமர்ந்து பத்து உறுப்பினர்க

News image
Updated On :26 செப்டம்பர் 2012, 6:13 am

சீனிவாசன்

பண்ருட்டி, செப்.5: பண்ருட்டி ஊராட்சி ஒன்றியக் கூட்டத்தில் ஊராட்சிக் குழுத் தலைவரின் அராஜகப் போக்கைக் கண்டித்து துணைத் தலைவர் சிவசங்கரி தலைமையில் ஊராட்சி மன்ற அலுவலக வாயிலில் அமர்ந்து பத்து உறுப்பினர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.

அதிமுக., பாமக., வைச் சேந்த தலா 4  உறுப்பினர்கள், திமுக உறுப்பினர்கள் 2 பேர் என 10 உறுப்பினர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாக ஊராட்சி மன்றக் கூட்டத்தில் சீதாபதி என்ற அதிமுக கவுன்சிலர், முதலில் நாங்கள் கேள்வி கேட்கிறோம். தீர்மானத்தை பிறகு படியுங்கள் என்றார். ஆனால் தலைவர் அதற்கு மறுதலையாகச் சொன்னார். அதைத் தொடர்ந்து வாக்குவாதம் நடந்தது. பின்னர் தீர்மானம் படிக்கப்பட்டது. உறுப்பினர்கள் கேள்வி கேட்டார்கள்.

அப்போது எழுந்த வாக்குவாதத்தைத் தொடர்ந்து, உறுப்பினர்கள் வெளியேறினர். பின்னர் தர்ணாவிலும் இறங்கினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.