விருதுநகர், செப்.6: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே நேற்று நிகழ்ந்த வெடிவிபத்தில் தரைமட்டமான கட்டடங்களில் மீட்புப் பணி இன்று காலை துவங்கியது.
நேற்று இரவு தமிழக அமைச்சர்கள் வந்து ஆய்வு மேற்கொண்டதை ஒட்டி அந்த இடம் பாதுகாக்கப்பட்டிருந்தது. இன்று காலை முதல் கட்டட இடிபாடுகளை அகற்றி, மீட்புப்பணி துவங்கியது.