தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

குடித்துவிட்டு தகராறு செய்த தந்தை கொலை; மகன் கைது

திருக்கோவிலூர், செப்., 20 : திருக்கோவிலூர், சாங்கியம் கிராமத்தைச் சேர்ந்த முரளி (20), இவரது தந்தை பெயர் காசி (48). காசி எப்போதும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து பிரச்னை செய்வது வழக்கம். இரண்டு நாட்கள

News image
Updated On :26 செப்டம்பர் 2012, 6:30 am

ச.​ கார்த்​தி​கே​யன்

திருக்கோவிலூர், செப்., 20 : திருக்கோவிலூர், சாங்கியம் கிராமத்தைச் சேர்ந்த முரளி (20), இவரது தந்தை பெயர் காசி (48).

காசி எப்போதும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து பிரச்னை செய்வது வழக்கம். இரண்டு நாட்களுக்கு முன்பு குடித்து விட்டு வந்த காசி, முரளியை தடியால் அடித்துள்ளார். இந்த நிலையில் இன்று குடித்து விட்டு வீட்டுக்கு வந்து தகராறு செய்த காசியை, முரளி தடியால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த காசியை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே காசி உயிரிழந்துவிட்டார். இது குறித்து மணலூர்பேட்டை  காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து முரளியை கைது செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.