தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சிவகங்கையில் ராஜபட்ச உருவபொம்மையை எரித்த மதிமுக.வினர் கைது

சிவகங்கை, செப்.21: இலங்கை அதிபர் ராஜபட்சவின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சிவகங்கையில் அவரது உருவபொம்மையை எரித்து போராட்டம் நடத்திய மதிமுக.வைச் சேர்ந்த 35 பேர் கைது செய்யப்பட்டனர்.  சிவகங்கைய

News image
Updated On :26 செப்டம்பர் 2012, 6:32 am

யுகன்

சிவகங்கை, செப்.21: இலங்கை அதிபர் ராஜபட்சவின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சிவகங்கையில் அவரது உருவபொம்மையை எரித்து போராட்டம் நடத்திய மதிமுக.வைச் சேர்ந்த 35 பேர் கைது செய்யப்பட்டனர். 
சிவகங்கையில் மதிமுக மாவட்ட அவைத் தலைவர் ஜெயபிரகாஷ் தலைமையில் அரண்மனைவாசல் முன்பு ராஜபட்ச உருவபொம்மையை அக் கட்சியினர் எரித்து போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் இந்தியா வந்துள்ள ராஜபட்ச வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர். இப்போராட்டத்தில் மதிமுக மாநில செயற்குழு உறுப்பினர் முருகேசன், மாவட்ட துணைச் செயலாளர்கள் சார்லஸ், தங்கப்பாண்டியன், நகர்ச் செயலாளர் சுந்தரபாண்டியன், ஒன்றியச் செயலாளர்கள் பெரியசாமிராஜா, தீபன் சக்ரவர்த்தி, பக்ருதீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதன்பின் ராஜபட்ச உருவபொம்மையை எரித்ததாக மதிமுக.வைச் சேர்ந்த 35 பேரை போலீசார் கைது செய்தனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.