இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பண்ருட்டி அரசு மருத்துவமனையில் குழந்தை மரணம் : உறவினர்கள் போராட்டம்

பண்ருட்டி, செப்., 21 : பண்ருட்டி அருகே அங்குசெட்டி பாளையத்தைச் சேர்ந்த பழனி என்பவரது மனைவி ஜெயா (25), நேற்று பிரசவ வலி காரணமாக பண்ருட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று அதிகாலை ஜெயாவுக்

News image
Updated On :26 செப்டம்பர் 2012, 6:31 am

சீனிவாசன்

பண்ருட்டி, செப்., 21 : பண்ருட்டி அருகே அங்குசெட்டி பாளையத்தைச் சேர்ந்த பழனி என்பவரது மனைவி ஜெயா (25), நேற்று பிரசவ வலி காரணமாக பண்ருட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று அதிகாலை ஜெயாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில், இன்று மதியம் 1 மணியளவில் குழந்தை உயிரிழந்துவிட்டது. இதனைக் கண்டித்து ஜெயா மற்றும் பழனியின் உறவினர்கள் சுமார் 25 பேர் மருத்துவமனையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

இது குறித்து சிகிச்சை அளித்த மருத்துவரிடம் விசாரித்ததில், குழந்தை, தாயின் வயிற்றில் இருக்கும் போதே மலம் கழித்துவிட்டது. அது பெருமளவு குழந்தையின் வாய் மற்றும் மூக்குக்குள் சென்றுவிட்டதால், குழந்தையின் நிலைமை குறித்து, குழந்தை பிறந்ததுமே பெற்றோரிடம் விளக்கி கூறியிருந்தோம். குழந்தையை காப்பாற்ற எந்த அளவுக்கு முயற்சி செய்ய முடியுமோ அதை செய்தோம். எனினும் குழந்தையின் மூக்கு வழியாக சென்ற மலம், மூச்சுக் குழாயை அடைத்து குழந்தை இறந்துவிட்டது என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.