சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

இலங்கைக்கு எதிராக வாக்களித்தது இந்தியா : தீர்மானம் நிறைவேற்றம்

ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில், இலங்கை அரசுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்து இந்தியா வாக்களித்துள்ளது.

Updated On :21 மார்ச் 2013, 11:13 am

ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில், இலங்கை அரசுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்து இந்தியா வாக்களித்துள்ளது.

இந்தியா உட்பட 25 நாடுகளின் பிரதிநிதிகள், இந்த தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்ததை அடுத்து, பெரும்பான்மையுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கைக்கு எதிராக அமெரிக்கத் தீர்மானத்துக்கு இந்தியா உட்பட 25 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன.  பாகிஸ்தான், வெனிசுலா உட்பட 13 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வாக்களித்தன. இந்த வாக்கெடுப்பில் 8 நாடுகள் பங்கேற்கவில்லை. இதனால், பெரும்பான்மையுடன், இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இன்று நிறைவேற்றப்பட்டது.

தீர்மானத்தில் பெரிய திருத்தம் எதையும் கோராத இந்தியா நிலையில், அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தின் மீது பேசிய இந்தியப் பிரதிநிதி திலிப் சின்ஹா, 13வது அரசியல் சட்ட திருத்தத்தை இலங்கை அமல்படுத்த வேண்டும். இலங்கை தனது நம்பகத் தன்மையைக் காக்க வேண்டும். அதற்கு நம்பகத்தன்மை மிக்க விசாரணை தேவை.

இலங்கையில் அனைத்து தரப்பு மக்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய அரசியல் தீர்வு தேவை. வடக்கு மாகாண மக்கள் தேர்தலில் பங்குபெறுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார். மேலும், இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் மற்ற நாடுகள் தலையிடக் கூடாது. இந்தியாவும், இலங்கையுடனான உறவைத் துண்டித்துக்கொள்ள முடியாது என்று தெரிவித்தார். 

ஐ.நா., மனித உரிமைகள் ஆணையம் இலங்கை சென்று, உலக நாடுகள் ஏற்கும் வகையில் சுதந்திரமான விசாரணை நடத்தவேண்டும் என்று கூறினார். மேலும், அனைத்து இன மக்களும் சம உரிமையுடன் வாழ இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் திலிப்  சின்ஹா. கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.