தேர்வெழுத வந்த இளைஞர்கள் திடீர் ரயில் மறியல் - கல்வீச்சு! ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்ந்து அதிகரிப்புஇந்தியாவில் 100 % எத்தனால் எரிபொருள்: மத்திய அமைச்சர் கட்கரி ஒப்புதல்தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்புஓமன் துறைமுகத்தில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமி உடலைக் கொண்டுவர நடவடிக்கைதேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைய திரிணமூல் அதிருப்தி எம்.பி.க்கள் முடிவுமாநிலங்களவையில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மையை நெருங்கும் பாஜக கூட்டணி!
/

சென்னையில் நாளை யஷ்வந்த் சின்ஹா பேசுகிறார்

இலங்கைத் தமிழர் பிரச்னை தொடர்பாக பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா நாளை (புதன்கிழமை) சென்னையில்

News image
Updated On :2 ஏப்ரல் 2013, 4:14 am IST

இலங்கைத் தமிழர் பிரச்னை தொடர்பாக பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா நாளை (புதன்கிழமை) சென்னையில் நடைபெறும் கூட்டத்தில் உரையாற்றவுள்ளார்.

இது குறித்து தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் திங்கள்கிழமை வெளியிட்ட  அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

இலங்கைத் தமிழர்கள் பிரச்னையில் மத்திய அரசு தோல்வியடைந்துள்ளதை மக்களுக்கு எடுத்துக் கூறும் விதமாகவும், எடுக்க கூடிய ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் குறித்தும் மார்ச் 19-ம் தேதி முதல் பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு கூட்டங்களை நடத்தி வருகிறோம்.

இதன் ஒரு பகுதியாக இலங்கைத் தமிழர் பிரச்னை, மீனவர்கள் மீதான தாக்குதல் பிரச்னை குறித்து பாஜகவின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா புதன்கிழமை மாலை 6 மணியளவில் ராயப்பேட்டையில் உள்ள ஹேமாமாலினி திருமண மண்டபத்தில் நடக்கும் சிறப்புக் கூட்டத்தில் உரையாற்ற உள்ளார் என்று அதில் குறிப்பிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.