திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

சரப்ஜித் சிங்கின் குடும்பத்தினரை சந்தித்தார் ஷிண்டே

பாகிஸ்தான் மருத்துவமனையில் இன்று காலை உயிரிழந்த சரப்ஜித் சிங்கின் உடலை இந்தியா கொண்டு வர அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதாக அவரது குடும்பத்தாருக்கு, ஷிண்டே உறுதி அளித்துள்ளார்.

News image
Updated On :2 மே 2013, 4:54 am

பாகிஸ்தான் மருத்துவமனையில் இன்று காலை உயிரிழந்த சரப்ஜித் சிங்கின் உடலை இந்தியா கொண்டு வர அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதாக அவரது குடும்பத்தாருக்கு, ஷிண்டே உறுதி அளித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே, இன்று சரப்ஜித் சிங்கின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். சரப்ஜித் சிங்கின் சகோதரி தல்பிர் கௌர் மற்றும் இதர குடும்ப உறவினர்களிடம், பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு சரப்ஜித் சிங்கின் உடலைக் கொண்டு வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு செய்து வருகிறது. அவரது உடல் இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டால், குடும்பத்தினரின் விருப்பப்படி இறுதி சடங்குகளை செய்து கொள்ளலாம். இந்தியாவிடம் சரப்ஜித் சிங்கின் உடலை ஒப்படைப்பது பாகிஸ்தான் அரசு எடுக்கும் முடிவின் அடிப்படையில் தான் இருக்கிறது. அதற்காக தான் காத்திருக்கிறோம் என்று ஷிண்டே கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.