மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

கபில் சிபலுக்கு சட்டத் துறை; ஜோஷிக்கு ரயில்வே

தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் சட்டத் துறையையும், சாலை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் சி.பி. ஜோஷி ரயில்வே அமைச்சகத்தையும் கூடுதலாக பொறுப்பேற்க உள்ளனர்.

News image
Updated On :11 மே 2013, 9:18 am

தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் சட்டத் துறையையும், சாலை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் சி.பி. ஜோஷி ரயில்வே அமைச்சகத்தையும் கூடுதலாக பொறுப்பேற்க உள்ளனர்.

சட்டத் துறை அமைச்சராக இருந்த அஸ்வனி குமாரும், ரயில்வே அமைச்சராக இருந்த பவன்குமார் பன்சாலும் பதவி விலகியதை அடுத்து, இவ்விரு துறைகளையும், கபில் சிபலும், ஜோஷியும் கூடுதல் பொறுப்பாக ஏற்று கவனிக்க உள்ளனர்.

மத்திய அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட உள்ள இந்த மாற்றம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த ஆண்டும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் முகுல் ராய், ரயில்வே அமைச்சர் பொறுப்பில் இருந்து விலகியதை அடுத்து, ஜோஷி தான் ரயில்வே அமைச்சகப் பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.