தமிழ்நாட்டுக்கு தெற்கே, தென்மேற்கு வங்க கடலில் 3 நாட்களுக்கு முன் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி அது தீவிரம் அடைந்து காற்றழுத்த மண்டலமாக மாறியது. இந்த புயலுக்கு 'மகேசன்' என பெயரிடப்பட்டது. இந்த புயல் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்தால் தமிழ் நாட்டில் நல்ல மழை பெய்யும் வாய்ப்பு இருந்தது. ஆனால் இன்று மதியம் புயல் திசை மாறி நகர்ந்ததால் தமிழ்நாட்டுக்கு மழை வாய்ப்பு இல்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் கூறியதாவது:-
தென்மேற்கு வங்க கடலில் உருவான 'மகேசன்' புயல் இன்று காலை சென்னைக்கு தென் கிழக்கே 1550 கி.மீ. தொலைவில் மையம் கொண்டு இருந்தது.இன்று மதியம் சென்னையில் இருந்து 1300 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. இது வடமேற்கு திசை நோக்கி நகர்ந்தால் தமிழ்நாட்டில் பலத்த மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அடுத்த 34 மணி நேரத்தில் வடக்கு திசை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது புயல் வங்காள தேசம், மியான்மர் நோக்கி திசை மாறியது. இதனால் தமிழகத்தில் மழை வாய்ப்பு இல்லை என தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டி20 கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த பாபர் அசாம்..! கெயில், விராட் கோலி சாதனை முறியடிப்பு!

”தமிழ்நாட்டின் மீது Congress-க்கு அக்கறை இல்லை!” பியூஷ் கோயல் | BJP

மேற்கு வங்க முதல் கட்டத் தேர்தல்: பிரசாரம் நிறைவு

மேற்கு வங்கத்தில் முதல் கட்ட தேர்தல் பிரசாரம் நிறைவு!
வீடியோக்கள்

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

