மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

40 புள்ளிகள் உயர்வுடன் சென்செக்ஸ் நிறைவு

பங்கு வர்த்தகத்தின் சிறப்பு வணிகம் இன்று 40 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு பெற்றது.

Updated On :11 மே 2013, 9:00 am

பங்கு வர்த்தகத்தின் சிறப்பு வணிகம் இன்று 40 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு பெற்றது.

சனிக்கிழமையான இன்று 2 மணி நேர சிறப்பு வணிகம் நடைபெற்றது. சில குறிப்பிட்ட பங்குகளின் வணிகம் மட்டும் இன்று வர்த்தகத்துக்கு வந்தது. வெள்ளிக்கிழமையான நேற்று வணிகம் 20 ஆயிரம் புள்ளிகளைக் கடந்த நிலையில் நிறைவு பெற்றது. இன்றைய வர்த்தகத்தின் போது சென்செக்ஸ் 40 புள்ளிகள் உயர்ந்து 20,122 என்ற நிலையில் இருக்கும் போது நிறைவு பெற்றது.

இதேப்போல நிப்டி குறியீடு 12.50 புள்ளிகள் உயர்ந்து 6,107.25 என்ற நிலையில் இருக்கும் வர்த்தகம் நிறைவு பெற்றது.

டாக்டர் ரெட்டிஸ் லேப், சன் பார்மா, சிப்லா, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரிஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் லாபத்தை அடைந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.