92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கூட்டுறவு தேர்தலில் முறைகேட்டை கண்டித்து சாலைமறியல்

சிதம்பரம் அருகே புவனகிரியில் கூட்டுறவு சங்கத் தேர்தல் முறைகேடுகளை கண்டித்து வியாழக்கிழமை சாலைமறியல் நடைபெற்றது. இதனால் சிதம்பரம்-கடலூர் சாலையில் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

News image
Updated On :4 ஏப்ரல் 2013, 1:27 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அருகே புவனகிரியில் கூட்டுறவு சங்கத் தேர்தல் முறைகேடுகளை கண்டித்து வியாழக்கிழமை சாலைமறியல் நடைபெற்றது. இதனால் சிதம்பரம்-கடலூர் சாலையில் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கடலூர் மாவட்டம்  கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கீழமணக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. அதிமுக சார்பில் குறியாமங்கலத்தைச் சேர்ந்த கோவிந்தராஜன் வேட்புமனு தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து சுயேட்சையாக ஆயிபுரம் ஜெயச்சந்திரன் என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்நிலையில் புதன்கிழமை மாலை வேட்பாளர் பட்டியல் ஒட்டப்படவில்லை. இதனால் கூட்டுறவு சங்கத் தேர்தலில் முறைகேடு நடைபெறுவதை கண்டித்து கீழமணக்குடி, ஆயிபுரம், குறியாமங்கலம் ஆகிய 3 கிராமங்களை சேர்ந்த மக்கள் புவனகிரி வெள்ளாற்று பாலம் அருகே வியாழக்கிழமை மாலை சாலைமறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் புகழேந்தி, அறிவானந்தம் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர். இதனால் சுமார் 30 நிமிடங்கள் சிதம்பரம்-கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.