விசாரணையில் சிதம்பரம் அருகே உள்ள உத்தமசோழமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ஸ்டாலின் (26), உசுப்பூர் பெரியத்தெருவைச் சேர்ந்த கிருபாகரன் (27), புதுச்சேரி ரெயின்போ நகரைச் சேர்ந்த டிராக் சிவக்குமார் (26), புதுச்சேரி வாண்டர்பேட்டையைச் சேர்ந்த பாண்டியன் (23), புதுச்சேரி தெற்கு அணைக்கரை வீதியைச் சேர்ந்த ஜெரால்டு (21), புதுச்சேரி முத்தையால்பேட்டையைச் சேர்ந்த எலிகார்த்தி (23) ஆகிய 6 பேரும் சேர்ந்து புறவழிச்சாலையில் வழிபறியில் ஈடுபட திட்டமிட்டது தெரியவந்து போலீஸார் அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 4 நாட்டுவெடிகுண்டுகள், 4 வீச்சரிவாள்கள், இரண்டு மோட்டார் சைக்கிள்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.