ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ஆஸ்திரேலிவுக்குச் செல்ல முயன்ற 120 இலங்கைத் தமிழ் அகதிகள் கைது

தமிழகத்தில் தென்காசி, கடையநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அகதி முகாம்களில் இருந்த இலங்கைத் தமிழ் அகதிகள் 120 பேர் படகில் ஆஸ்திரேலியாவுக்குச் செல்ல முயன்றனர். அவர்கள் ந

News image
Updated On :6 ஏப்ரல் 2013, 5:52 am

சங்கர்

தமிழகத்தில் தென்காசி, கடையநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அகதி முகாம்களில் இருந்த இலங்கைத் தமிழ் அகதிகள் 120 பேர் படகில் ஆஸ்திரேலியாவுக்குச் செல்ல முயன்றனர். அவர்கள் நாகப்பட்டினம் அருகே சர்வதேச கடல் எல்லையில் சென்றபோது படகு பழுதானதால், நடுக்கடலில் தத்தளித்தனர்.

இது குறித்து செய்தி  அறிந்த இந்தியக் கடலோர காவல் படையினர், அவர்களைத் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில், இன்று காலை அவர்களை சர்வதேச கடல் எல்லையில் மீட்டு, கைது செய்து தமிழகத்துக்கு அழைத்து வருவதாக கடலோர காவல் படை அதிகாரிகள் கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.