தமிழகம் முழுவதும் மார்ச் 27-ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கின. இத்தேர்வில் சுமார் 10 லட்சம் மாணவ, மாணவியர்கள் பங்கேற்று தேர்வு எழுதினார்கள். தமிழ் 2-ம் தாள் தேர்வில் வினாத்தாளில் 38-வது வினாவிற்கு வங்கி படிவம் கல்வித்துறையினரால் வழங்கப்படவில்லை. படிவம் இல்லாமல் அந்த வினாவிற்கு விடை எழுத முடியாத காரணத்தால், அந்த வினாவின் எண்ணை எழுதினால் மதிப்பெண் உண்டு தேர்வு கண்காணிப்பாளர் கூறியதால் மாணவர்கள் எண்ணை மட்டும் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில் தமிழக கல்வி அமைச்சர் சட்டப்பேரவையில் வினாவிற்கு விடை எழுத முயற்சித்தவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.