மயிலாடுதுறை அருகே லாரி-அரசு பஸ் மோதல்: பெண் பலி; 23 பேர் காயம்
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே அரசு பஸ்ஸும் லாரியும் நேருக்கு நேர் மோதியதில் பெண் ஒருவர் பலியானார்.


நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே அரசு பஸ்ஸும் லாரியும் நேருக்கு நேர் மோதியதில் பெண் ஒருவர் பலியானார்.
பழனியில் இருந்து சிதம்பரம் நோக்கி அரசுப் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. ஆக்கூரில் இருந்து சென்ற லாரி ஒன்று, மயிலாடுதுறை அருகே மாமரத்துமேடை என்ற இடத்தில் அரசு பஸ்ஸுடன் நேருக்கு நேர் மோதியது. இன்று காலை 3.45 மணிக்கு நிகழ்ந்த இந்த விபத்தில், பஸ்ஸில் பயணம் செய்த பெண் ஒருவர் பலியானார். 23 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் 5 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மயிலாடுதுறை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...