எனவே நகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் வக்காரமாரி நீர்தேக்கத்தில் கூடுதலாக போர்வெல்கள் அமைத்தும், வக்காரமாரி நீர்தேக்கத்திலிருந்து சிதம்பரம் நகருக்கு வரும் பகிர்மான குடிநீர் குழாயை மாற்றி அமைக்க வேண்டும் என நகர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் சிதம்பரம் அருகே உள்ள குமராட்சி பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை அமைத்து, கொள்ளிடம் ஊற்றுநீரை கொண்டு வந்து சிதம்பரம் நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யலாம் என சமூகஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். எனவே நகராட்சி நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் இதனை கருத்தில் கொண்டு கோடைக்காலத்தில் குடிநீர் பஞ்சத்தை போக்கவும், நிரந்திர தீர்வாக கொள்ளிடம் ஊற்றுநீர் திட்டத்தை செயல்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.