நீதிமன்ற தீர்ப்பின்படி ஓய்வூதியத்தை மறுநிர்ணயம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
சங்க பேரவைக்கூட்டம், கடலூர் கிளைத்தலைவர் அ.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. மாநில தலைவர் என்.அப்துல் மஜீத், பொதுச்செயலர் ஆர்.பன்னீர்செல்வம், கிளை செயலர் சி.தேவராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படியை அகவிலை ஊதியமாக கணக்கிட்டு ஓய்வூதியத்தை மறுநிர்ணயம் செய்ய வேண்டும். தன்பங்கேற்பு ஓய்வூதிய திட்டம் எனும் புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய திட்டமே தொடர மாநில அரசு நடவடிக்கையெடுக்க வேண்டும்.வாரியத்தில் பணியாளர்கள் பற்றாக்குறையால் வழக்கமான பணிகள் பாதிக்கப்படுவதோடு, ஓய்வூதியம் பெறுவோரும் அதற்குரிய பலன்களை உரிய காலத்தில் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் காலிப்பணியிடங்கள் அனைத்தையும் உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக கடலூர் பாதிரிகுப்பம் குளோரி அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிக்கு சங்கத்தின் சார்பில் கட்டிக்கொடுக்கப்பட்ட சத்துணவு மையத்தை மாநில தலைவர் அப்துல் மஜீத் திறந்துவைத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.