தமிழகத்தில் உள்ள 77 வருவாய் வட்ட நூலகங்களின் தரத்தை உயர்த்த 2 மாடி கட்டடடம் கட்டி, குளு குளு வசதியுடன் ஐஏஎஸ். ஐபிஎஸ் பயிற்சியும் அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனடிப்படையில் சிதம்பரம் கிளை நூலகத்தை தரம் உயர்த்த தமிழகஅரசு ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. கட்டடடம் கட்டுவதற்கு சிதம்பரம் கச்சேரித்தெருவில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தை தேர்வு செய்து நகரமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கோப்பு ஆட்சியரின் பரிந்துரைக்கு அனுப்பப்பட்டு பல மாதங்கள் ஆகிறது. ஆட்சியரிடமிருந்து கோப்புகள் கிடைத்தவுடன் பணிகள் தொடங்கப்படும் நிலை உள்ளது. எனவே கடலூர் மாவட்ட ஆட்சியர் பழமை வாய்ந்த் சிதம்பரம் கிளை நூலகத்தை தரம் உயர்த்தவும், கட்டடவும் கட்டவும் உடனடியாக கோப்பினை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிதம்பரம் பகுதி நூலக வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.