92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

சிதம்பரம் அருகே வீடு புகுந்து 40 பவுன் நகைகள் திருட்டு!

சிதம்பரம் அருகே உள்ள புவனகிரி காவல் நிலையத்தின் அருகே வீடு புகுந்து 40 பவுன் நகைகள் திருடு போனது.

News image
Updated On :30 ஏப்ரல் 2013, 3:43 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அருகே உள்ள புவனகிரி காவல் நிலையத்தின் அருகே வீடு புகுந்து 40 பவுன் நகைகள் திருடு போனது.

புவனகிரி காவல் நிலையத்தின் எதிரில் உள்ள வீட்டில் வசித்து வருபவர் பிரேமநாதன் (62). வீட்டின் முன்புற பகுதியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் இவர் குடும்பத்துடன் திங்கள்கிழமை காலை கீரப்பாளையம் அருகே உள்ள வடப்பாக்கத்தில் உள்ள குலதெய்வம் கோயிலுக்கு சென்று மாலை வீடு திரும்பினார். அப்போது மர்மஆசாமிகள் பூட்டை உடைத்து வீட்டிற்குள் புகுந்து பீரோவிலிருந்த 40 பவுன் நகைரள், ரூ.25 ஆயிரம் ரொக்கம் மற்றும் வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்றது தெரியவந்து அதிர்ச்சியுற்றார். திருடு போன பொருள்களின் மத்பிப்பு ரூ.8 லட்சமாகும். இதுகுறித்து புகாரின் பேரில் புவனகிரி போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.