92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

உழவர் பெருவிழாவில் வேளாண் அதிகாரிகளை முற்றுகையிட்ட விவசாயிகள்!

காட்டுமன்னார்கோயில் அருகே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உழவர் பெருவிழாவில் விவசாயிகள் கருப்பு பேட்ஜ் அணிந்து வேளாண் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

News image
Updated On :30 ஏப்ரல் 2013, 2:46 pm

ஜி.சுந்தரராஜன்

காட்டுமன்னார்கோயில் அருகே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உழவர் பெருவிழாவில் விவசாயிகள் கருப்பு பேட்ஜ் அணிந்து வேளாண் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

காட்டுமன்னார்கோயில் பிள்ளையார்தாங்கல் கிராமத்தில் தமிழகஅரசின் சார்பில் வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடைத்துறை, கூட்டுறவுத்துறை பங்கேற்ற உழவர் பெருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. வேளாண் உதவி இயக்குநர் விஜயகுமார் தலைமை வகித்தார்.

இவ்விழாவில் தமிழக அரசின் நலத்திட்டங்கள் சரியாக வழங்கப்படவில்லை, அரசு நிவாரணமும் சரியாக வழங்கப்படவில்லை என வலியுறுத்தி விவசாய சங்கத் தலைவர் பி.விநாயகமூர்த்தி தலைமையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கருப்பு பேட்ஜ் அணிந்து பங்கேற்றனர். பின்னர் கூட்டத்தில் தமிழகஅரசு விவசாயிகளுக்கு வழங்க உத்தரவிட்டுள்ள மானியத் திட்டங்கள் விவசாயிகளுக்கு சென்றடையவில்லை. மானியங்கள் குறித்து விவசாயிகளுக்கு தெரிவிக்கப்படவில்லை என கூறி அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு கலைந்து சென்றனர். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.