47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

போலீஸார் தேடுவதை அறிந்து ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை

திருவாரூர் மாவட்டம் களப்பால் காவல் சரகம் கள்ளியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அப்பாவு மகன் அருணாசலம் (48). இவர் நேற்று

News image
Updated On :8 ஆகஸ்ட் 2013, 6:46 am

ரவி

திருவாரூர் மாவட்டம் களப்பால் காவல் சரகம் கள்ளியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அப்பாவு மகன் அருணாசலம் (48). இவர் நேற்று கோட்டூர் கீழச்சேரியில் உள்ள ஜெயலலிதா பேரவைச் செயலாளர் பாலகிருஷ்ணன் என்பவரின் மனைவி பவானி என்பவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி நகையைப் பறிக்க முயன்றாராம்.

பவானி கூச்சலிடவே இவர் ஓடிவிட்டாராம். இதுகுறித்து பவானி கோட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் தன்னைத் தேடுவதை அறிந்த அவர், ஆலிவலம் காவல் சரகம் திருப்பத்தூர் கிராமத்தில் கிளிப்பிள்ளை என்பவரின் பூட்டியிருந்த வீட்டின் பின்புறத்தில் உள்ள மாமரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஆலிவலம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.