போலீஸார் தேடுவதை அறிந்து ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை
திருவாரூர் மாவட்டம் களப்பால் காவல் சரகம் கள்ளியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அப்பாவு மகன் அருணாசலம் (48). இவர் நேற்று


திருவாரூர் மாவட்டம் களப்பால் காவல் சரகம் கள்ளியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அப்பாவு மகன் அருணாசலம் (48). இவர் நேற்று கோட்டூர் கீழச்சேரியில் உள்ள ஜெயலலிதா பேரவைச் செயலாளர் பாலகிருஷ்ணன் என்பவரின் மனைவி பவானி என்பவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி நகையைப் பறிக்க முயன்றாராம்.
பவானி கூச்சலிடவே இவர் ஓடிவிட்டாராம். இதுகுறித்து பவானி கோட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் தன்னைத் தேடுவதை அறிந்த அவர், ஆலிவலம் காவல் சரகம் திருப்பத்தூர் கிராமத்தில் கிளிப்பிள்ளை என்பவரின் பூட்டியிருந்த வீட்டின் பின்புறத்தில் உள்ள மாமரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஆலிவலம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...