வழக்குரைஞரை கைலியுடன் போலீஸார் அழைத்துச் சென்ற விவகாரம்: நடுவர் மன்றத்துக்கு பூட்டு போடும் போராட்டம்
வழக்கு ஒன்றில் போலி ஆவணங்களைத் தாக்கல் செய்ததாகக் கூறி வழக்குரைஞர் ஒருவரை வீட்டில் இருந்து கட்டிய கைலியுடன் போலீஸார் அழைத்துச் சென்றதால் ஆத்திரமடைந்த வழக்குரைஞர் சங்கத்தினர் நீதித்துறை நடுவர்மன்றத்துக்கு பூட்டுபோடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.









