தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

யானைகளை பாதுகாப்பாக விரட்ட மக்களின் ஒத்துழைப்பு தேவை

ரிஷிவந்தியம் பகுதிக்கு உட்பட்ட இடங்களில் 6 யானைகள் புகுந்து, விளைநிலம், வீடுகளை சேதப்படுத்தி வருகின்றன. இதனால், கிராம மக்கள் பீதி

News image
Updated On :14 ஆகஸ்ட் 2013, 5:57 am

ச.​ கார்த்​தி​கே​யன்

யானைகளை வனப்பகுதிக்குள் பாதுகாப்பாக விரட்ட பொதுமக்களின் ஒத்துழைப்பு வேண்டும் என்றனர் வனத்துறை அதிகாரிகள்.

ரிஷிவந்தியம் பகுதிக்கு உட்பட்ட இடங்களில் 6 யானைகள் புகுந்து, விளைநிலம், வீடுகளை சேதப்படுத்தி வருகின்றன. இதனால், கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர். விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்வதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இந்நிலையில், யானைகளை பாதுகாப்பாக விரட்டும் பணியில்

வனச்சரக அதிகாரிகள் காவல் துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இரவு பகலாக முயற்சி செய்தும், யானைகளை விரட்ட முடியவில்லை. இது குறித்து அதிகாரிகள் தெரிவித்த போது, யானைகளை பாதுகாப்பாக விரட்ட முற்பட்டபோது ஒரு பக்கமாக மக்கள் கூடிநின்று, யானைகளை திசை திருப்புகின்றனர், இதனால் அவற்றை பாதுகாப்பாக விரட்ட முடியவில்லை; பொதுமக்கள் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே பாதுகாப்பாக யானைகளை விரட்ட முடியும் என்று தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.