விழாவின்போது, சட்டப்பேரவை முன்னாள் தலைவர் எஸ். செல்லப்பாண்டியன் நினைவு அஞ்சல் உறையை அஞ்சல் துறை தென்மண்டல தலைவர் சாருகேசி வெளியிட முதல் உறையை மத்திய இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் பெற்றுக் கொண்டார்.முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், மக்களை முன்னாள் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் வேலுச்சாமி, காங்கிரஸ் மாவ்டடத் தலைவர்கள் எஸ்.ஜஸ்டின், பி. கதிர்வேல், நூற்றாண்டு விழாக் குழுச் செயலர் ஏபிசிவி சண்முகம், எஸ். செல்லப்பாண்டியனின் மகன் சிவக்குமார், மாமன்ற உறுப்பினர் சந்திரபோஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.