தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

பண்ருட்டி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்துக்குள் பாம்பு புகுந்ததால் பரபரப்பு

பண்ருட்டி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்துக்குள் பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

News image
Updated On :30 ஆகஸ்ட் 2013, 9:51 am

சீனிவாசன்

பண்ருட்டி - கடலூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் சுமார் இரண்டரைக் கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டது.

இந்த வளாகத்தில் சார்பு நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் இயங்கி வருகின்றன.

இன்று மாவட்ட உரிமையியல் நீதிமன்ற வளாகம் அருகே உள்ள காலி இடத்தில் பெரிய பாம்பு ஒன்று வந்தது. இதை நீதிமன்றத்துக்கு வந்திருந்தவர்கள் பார்த்து கூச்சலிட்டனர். இது குறித்து உடனடியாக பண்ருட்டி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்புத் துறையினர் பாம்பை பிடிக்கும் பணியில் ஈடுபட்டபோது 7 அடி நீளமுள்ள சாரை பாம்பை உயிருடன் பிடித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.