சரக்கு வேன் மோதி ஒருவர் பலி
கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த எஸ்.குலாம்(50).இவர் கோட்டைப்பட்டினத்தில் வாடகை பாத்திரக் கடை தொழில் செய்து வருகின்றார்.இந்நிலையில்,வெள்ளிக்கிழமை இரவு தனது பைக்கில் ஜெகதாப்பட்டினத்திற்கு


புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் அருகே சரக்கு வேன் மோதியதில் வெள்ளிக்கிழமை ஒருவர் உயிரிழந்தார்.
கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த எஸ்.குலாம்(50).இவர் கோட்டைப்பட்டினத்தில் வாடகை பாத்திரக் கடை தொழில் செய்து வருகின்றார்.இந்நிலையில்,வெள்ளிக்கிழமை இரவு தனது பைக்கில் ஜெகதாப்பட்டினத்திற்கு சென்று கொண்டிருந்தார்.ஜெகதாப்பட்டினம் பள்ளிக்கூடம் அருகே சென்றபோது,பின்னால் வந்த சரக்கு வேன் இவர் மீது மோதியுள்ளது.இதில் பலத்த காயம் அடைந்த குலாம் மணமேல்குடி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து ஜெகதாப்பட்டினம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து கொடிக்குளத்தைச் சேர்ந்த வேன் ஓட்டுனர் மு.ராஜேஷ் கண்ணாவை(29) கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...