ஒட்டுமொத்தமாக அனைத்து கவுண்டர்களும் மூடப்பட்டதால் விழுப்புரம்-மயிலாடுதுறை தடத்தில் செல்லும் ரயில்களில் பயணம் செய்யும் பயணிகள் டிக்கட் எடுக்க முடியாமல் அவதியுற்றனர். பின்னர் மயிலாடுதுறை ரயில்வே நிலைய அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது டிக்கட் எடுக்காமல் ஏறி வந்து இங்கு வந்து டிக்கட் எடுத்துக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளனர். இதனால் மாலை 3 மணிக்கு மேல்த சென்னை-காரைக்கால் எக்ஸ்பிரஸ் ரயில், மயிலாடுதுறை- விழுப்புரம் பாசஞ்சர், விழுப்புரம்-மயிலாடுதுறை பாசஞ்சர், பெங்களூர்-காரைக்கால் எக்ஸ்பிரஸ் ரயில் ஆகிய ரயில்களில் பயணிகள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் டிக்கட் எடுக்காமலேயே ஏறி சென்றனர். இதனால் சிதம்பரம் ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.