சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக நால்வர் கைது
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள வி.முத்துலிங்காபுரத்தைச் சேர்ந்தவர் பவுண்ராஜ். இவரது 15 வயது மகள், கடைக்குச் சென்றுவிட்டு பள்ளிக்கூடம் அருகே வந்து கொண்டிருந்துள்ளார். அப்போது இரு இரு சக்கர


விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக நால்வரை போலீஸார் கைது செய்தனர். மேலும் ஒருவரைத் தேடி வருகிறார்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள வி.முத்துலிங்காபுரத்தைச் சேர்ந்தவர் பவுண்ராஜ். இவரது 15 வயது மகள், கடைக்குச் சென்றுவிட்டு பள்ளிக்கூடம் அருகே வந்து கொண்டிருந்துள்ளார். அப்போது இரு இரு சக்கர வாகனத்தில் 5 பேர் வந்துள்ளார்கள். இதில் கூனம்பட்டியைச் சேர்ந்த பாண்டி மகன் பாண்டிமுருகன் (23) மற்றும் தர்மர் மகன் அயல்ராஜா (23) ஆகியோர் அந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். இதற்கு மற்ற மூவரும் உடந்தையாக இருந்துள்ளனர்.
இது குறித்து சிறுமி கிருஷ்ணன்கோவில் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து பாண்டிமுருகன், அயல்ராஜா, முருகன் மகன் ரவிக்குமார் (22), பால்சாமி மகன் கண்ணதாசன் (23) ஆகியோரைக் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள பரமசிவம் என்பவரைத் தேடி வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...