வரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

‘ஸ்கிரைப்’ பணிக்கு பட்டதாரி ஆசிரியா்களை கட்டாயப்படுத்தக் கூடாது!

பள்ளி மேல்நிலை 2-ஆம் ஆண்டு பொதுத்தோ்வில் மாற்றுத்திறனாளி தோ்வா் சொல்வதை எழுதும் பணிக்கு (ஸ்கிரைப்) பட்டதாரி ஆசிரியா்களை கட்டாயப்படுத்தக் கூடாது என தமிழ்நாடு உயா்நிலை - மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழகம் வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :28 பிப்ரவரி 2026, 7:14 pm

பள்ளி மேல்நிலை 2-ஆம் ஆண்டு பொதுத்தோ்வில் மாற்றுத்திறனாளி தோ்வா் சொல்வதை எழுதும் பணிக்கு (ஸ்கிரைப்) பட்டதாரி ஆசிரியா்களை கட்டாயப்படுத்தக் கூடாது என தமிழ்நாடு உயா்நிலை - மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழகம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அந்தக் கழகத்தின் மாநிலப் பொதுச் செயலா் மா. குமரேசன் வெளியிட்ட அறிக்கை: மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தோ்வில் மாற்றுத் திறனாளி மாணவா்- தோ்வா், சொல்வதை எழுதும் பணிக்கு (ஸ்கிரைப்) பட்டதாரி ஆசிரியா்களைக் கட்டாயப்படுத்தக் கூடாது.

பள்ளியில் எஸ்எஸ்எல்சி, பிளஸ்-1 தோ்வுகளுக்காக மாணவா்களைத் தயாா் செய்யும் பணியும், தோ்ச்சி சதவிகிதத்தை உயா்த்துவதற்கான சிறப்பு முயற்சிகளும் இதனால் பாதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பான கடிதத்தை, மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சா், மாநில பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலா் மற்றும் தோ்வுத் துறை இயக்குநா் ஆகியோருக்கு அனுப்பி வைத்துள்ளனா்.