அனைவரும் சிகிச்சை பெற்ற நிலையில், சுந்தரபாண்டி, வெற்றி உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்தனர். அவனியாபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, பொட்டப்பாளையம் அருகே உள்ள பாட்டத்தைச் சேர்ந்த முத்துவிஜயன் மற்றும் அனுப்பானடியைச் சேர்ந்த ராமர், மணிகண்டன், கார்த்திக், சந்திரசேகர், சோணையா, நாகராஜ், முத்துக்கருப்பன், மோகன், விக்னேஷ், சந்தோஷ் ஆகியோரை கைது செய்தனர். தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைதான இவர்கள் உயர் நீதிமன்ற உத்தரவின்பேரில் விடுவிக்கப்பட்டனர். பின்னர், காவல் துறையின் மேல்முறையீட்டால் மீண்டும் கைதாகி அண்மையில் ஜாமீனில் வெளி வந்தனர்.