எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

வேன் கவிழ்ந்து ஐயப்ப பக்தர்கள் காயம்

தேனி-பெரியகுளம் நெடுஞ்சாலையில் மதுராபுரி விலக்கு அருகே வெள்ளிக்கிழமை இரவு உளுந்தூர்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஐய்ப்ப பக்தர்கள் சென்ற வேன் கவிழந்ததில் 22 பேர்

Updated On :7 டிசம்பர் 2013, 11:55 am

தேனி-பெரியகுளம் நெடுஞ்சாலையில் மதுராபுரி விலக்கு அருகே வெள்ளிக்கிழமை இரவு உளுந்தூர்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஐய்ப்ப பக்தர்கள் சென்ற வேன் கவிழந்ததில் 22 பேர் காயமடைந்தனர்.

உளுந்தூர்பேட்டை அருகே நகர்மன்னார்குடியைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் சிலர் சபரிமலைக்கு வேனில் சென்று கொண்டிருந்தனர். விருத்தாச்சலம் அருகே கருநத்தம் பகுதியைச் சேர்ந்த கோபு(35) என்பவர் வேனை ஓட்டிச் சென்றுள்ளார். தேனி-பெரியகுளம் நெடுஞ்சாலையில், மதுராபுரி விலக்கு அருகே வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில், வேனில் பயணம் செய்ய ஐயப்ப பக்தர்கள் தர்மராஜ், சாமித்துரை, பெரியசாமி, வெள்ளையன், வேன் ஓட்டுநர் கோபு உள்பட 22 பேர் காயமடைந்து தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து அல்லிநகரம் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.