ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

நாகை, பாம்பனில் 2ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு

நாகப்பட்டினம் மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக த

News image
Updated On :7 டிசம்பர் 2013, 7:32 am

சங்கர்

நாகப்பட்டினம் மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடல் சீற்றம் காரணமாக மீன்வர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை.

சென்னைக்கு தென்கிழக்கே 500 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ள புயலுக்கு மாதி என்று பெயரிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டிருந்தனர். தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்துக்கு கனமழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.