47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

அனுமதியின்றி மதுக்கூடம் நடத்திய 8 பேர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனுமதியின்றி மதுக்கூடம் நடத்தியதாக பெண் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டதாக டாஸ்மாக் மாவட்ட மேலாளர் எஸ். பியோ தங்கதுரை தெரிவித்தார்.இதுகுறித்து அவர்

News image
Updated On :11 டிசம்பர் 2013, 10:52 am

ரவி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனுமதியின்றி மதுக்கூடம் நடத்தியதாக பெண் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டதாக டாஸ்மாக் மாவட்ட மேலாளர் எஸ். பியோ தங்கதுரை தெரிவித்தார்.இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கலால் துறையின் உதவி ஆணையர் கே.மல்லிகா, டாஸ்மாக் துறையினர், மதுவிலக்கு போலீஸôர் ஆகியோர் ஒருங்கிணைந்து திங்கள்கிழமை கூட்டுத் தணிக்கையில் ஈடுபட்டனர். இதில் அரசு மதுபானக் கடைகளுக்கு அருகில் அனுமதியின்றி கள்ளத்தனமாக மதுக் கூடங்கள் நடத்துவது தெரியவந்தது.

இது தொடர்பாக பர்கூரைச் சேர்ந்த வேலு, குரும்பட்டியைச் சேர்ந்த முருகன் (60), சின்ன குழந்தை (53), கும்மனூர் முனியப்பன் (32), பீமாண்டப்பள்ளி முரளி (20), திப்பனபள்ளி லோகேஷ் (28), பல்வேரிப்பள்ளி சிவக்குமார் (25), ஆலப்பட்டி முனியம்மாள் (44) ஆகியோரை கைது செய்யப்பட்டு மதுவிலக்கு போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.