இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

உள்ளூர் டீவி சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்க கடலூர் மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் புகார்

தாழ்த்தப்பட்ட மக்கள் மனதை புண்படுத்தும் வகையில் ஒளிபரப்பும் உள்ளூர் தொலைக்காட்சி சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடலூர் தெற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி செயலாளர்

News image
Updated On :11 டிசம்பர் 2013, 1:27 pm

ஜி.சுந்தரராஜன்

தாழ்த்தப்பட்ட மக்கள் மனதை புண்படுத்தும் வகையில் ஒளிபரப்பும் உள்ளூர் தொலைக்காட்சி சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடலூர் தெற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி செயலாளர் வ.க.செல்லப்பன் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகார் விபரம்:

சமீபகாலமாக சிதம்பரத்தில் சாதிய சண்டைகள் பெருமளவில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சில மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் சிதம்பரம் நகரில் இயங்கும் உள்ளூர் தனியார் தொலைக்காட்சி சேனல்கள் தொடர்ந்து தாழ்த்தப்பட்ட மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையிலும், இழிவுப்படுத்தும் வகையில் வியாபார நோக்கத்தை மட்டும் கருத்தில் கொண்டு ஒளிபரப்பி வருகின்றன. எனவே மேற்கண்ட தொலைக்காட்சி நிறுவனங்கள் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வ.க.செல்லப்பன் புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.