முகாம் தொடக்கவிழாவிற்கு மிட்டவுன் ரோட்டரி சங்கத் தலைவர் வி.எஸ்.ராகவன் தலைமை வகிக்கிறார். பள்ளி தாளாளர் சி.ஷம்மிரத்னா முன்னிலை வகித்தார். காட்டுமன்னார்கோயில் சட்டப்பேரவை உறுப்பினர் நாக.முருகமாறன், அதிமுக நகரச் செயலாளர் தோப்பு கே.சுந்தர், நகர கூட்டுறவு வங்கித் தலைவர் சொ.ஜவகர், குமராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் கே.ஏ.பாண்டியன், ரோட்டரி உதவி கவர்னர் வி.சிவப்பிரகாசம், சாந்தா மார்பகப் புற்றுநோய் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் விஜயலட்சுமி சசிதரன், அண்ணாமலைப் பல்கலை. கடல் அறிவியல் புல முதல்வர் கே.கதிரேசன், முன்னாள் தலைவர் பொறியாளர் ஆர்.எஸ்.ரவிச்சந்திரன், பொருளாளர் என்.பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.