இவ்வழக்கு நகரமன்ற உறுப்பினர்கள் கோரிக்கையின் பேரில் தமிழகஅரசு சிபிசிஐடி போலீஸார் விசாரணைக்கு உத்தரவிட்டது. இந்நிலையில் இவ்வழக்கு குறித்து சிபி சிஐடி போலீஸார் வியாழக்கிழமை சிதம்பரத்தில் முகாமிட்டு தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சிதம்பரம் நகராட்சியில் 2011 மார்ச் மாதம், 2008-09 ஆண்டிற்கான கணக்கு தணிக்கை நடைபெற்றது. அப்போது கணக்கு சரிபார்த்த போது ரூ.1 கோடி 22 லட்சத்து, 44 ஆயிரத்து 773 ரூபாய் தொகை முறைகேடு செய்யப்பட்டு வங்கி கணக்கில் இல்லாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து நகராட்சி காசாளர் எஸ்.பாலு தலைமறைவானார்.