ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி நாகையில் திமுக உண்ணாவிரதப் போராட்டம்

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை  உடனடியாக விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக் கோரி நாகை மாவட்ட திமுக மீனவரணி சார்பில் நாகை தலைமை

News image
Updated On :20 டிசம்பர் 2013, 11:43 am

சங்கர்

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை  உடனடியாக விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக் கோரி நாகை மாவட்ட திமுக மீனவரணி சார்பில் நாகை தலைமை தபால் நிலையம் முன்பாக உண்ணாவிரதப் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 210 பேரையும், அவர்களின் 70 விசைப் படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தும் இலங்கை ராணுவத்தையும், இலங்கை அதிபர் ராஜபக் ஷவைக் கண்டிப்பது.  இந்திய, இலங்கை மீனவர்களை அழைத்துப் பேசி 2 நாட்டு மீனவர்களும் சுமூகமாக மீன்பிடிப்பை மேற்கொள்ள வழிவகை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.

நாகை மாவட்ட திமுக செயலாளர் ஏ.கே.எஸ். விஜயன் எம்.பி தலைமை வகித்துப் பேசுகையில், தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் போது தமிழக முதல்வர் பிரதமருக்குக் கடிதம் எழுதுவதால் மட்டும் பிரச்னைக்குத் தீர்வு கிடைத்திடாது. 2 நாட்டு மீனவர்களையும் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி, இந்திய, இலங்கை மீனவர்கள் சுமூகமாக மீன்பிடிப்பை மேற்கொள்ள வழிவகை செய்ய அரசு முனைப்புக் காட்ட வேண்டும் என்றார்.

நாகை மாவட்ட திமுக மீனவரணி அமைப்பாளர் என். கௌதமன், துணை அமைப்பாளர்கள் ஜி.என். ரவி, எஸ்.டி. தமிழ்ச்செல்வம், எம். மணிமாறன், என். சிட்டிலிங்கம், கோ. பூமிதாஸ், மா. அஞ்சாப்பிள்ளை ஆகியோர் முன்னிலை வகித்தார்.

மாவட்ட திமுக முன்னாள் செயலாளர் அ. அம்பலவாணன், தலைமைச் செயற்குழு உறுபபினர்கள் பி. கல்யாணம், எஸ்.பி. தங்கையா, மாவட்ட அவைத் தலைவர் குமரவேல், மாவட்டப் பொருளாளர் திருமலைச்சாமி, துணைச் செயலாளர்கள் ஞானசேகரன், இளஞ்செழியன், ஜெ. இறைஎழில்,  முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ்.கே. வேதரெத்தினம், கி. சத்தியசீலன், அன்பழகன், சித்திக் மற்றும் நகரச் செயலாளர்கள், ஒன்றியச் செயலாளர்கள், பிற அணி பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

காலை சுமார் 8 மணிக்குத் தொடங்கி இந்த உண்ணாவிரதப் போராட்டம் வெள்ளிக்கிழமை மாலை நிறைவடைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.