மாட்டுவண்டிகளுக்கு மணல் குவாரி அமைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
சிதம்பரம் வட்டத்தில் கொள்ளிடம் மற்றும் வெள்ளாற்றில் மாட்டு வண்டிகளுக்கு மணல் குவாரி அமைக்க வலியுறுத்தி மாட்டு வண்டி தொழிலாளர் சங்கம் மற்றும் கட்டுமான தொழிலாளர் சங்கம் ஆகியவற்றின்


சிதம்பரம் வட்டத்தில் கொள்ளிடம் மற்றும் வெள்ளாற்றில் மாட்டு வண்டிகளுக்கு மணல் குவாரி அமைக்க வலியுறுத்தி மாட்டு வண்டி தொழிலாளர் சங்கம் மற்றும் கட்டுமான தொழிலாளர் சங்கம் ஆகியவற்றின் சார்பில் சிதம்பரம் உதவிஆட்சியர் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியூ மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு தலைமை வகித்தார். பி.அன்பழகன், எஸ்.மாஸ்கோ, ஆர்.வீரமணி, எம்.சாம்பமூர்த்தி, கே.ரவி, ஏ.ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் பங்கேற்று கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் மாட்டு வண்டி தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் வி.திருமுருகன், மார்க்சிஸ் கம்யூ கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.கற்பனைச்செல்வம், நகரச் செயலாளர் ஆர்.ராமச்சந்திரன், பால் உற்பத்தியாளர் சங்க மாவட்ட அமைப்பாளர் ஆர்.சாதனந்தம், சிஐடியூ எஸ்.சங்கமேஸ்வரன், எம்.குப்புசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...