கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ரயிலில் ஏறி ஸ்ரீவில்லிபுத்தூர் வந்து இறங்கிய இரு குழந்தைகள் பெற்றோரிடம் ஒப்படைப்பு

ரயலில் ஏறி, ஸ்ரீவில்லிபுத்தூர் வந்து இறங்கி நடந்து சென்று கொண்டிருந்த இரு குழந்தைகளை கிராம மக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.

Updated On :22 டிசம்பர் 2013, 2:23 am

ரயலில் ஏறி, ஸ்ரீவில்லிபுத்தூர் வந்து இறங்கி நடந்து சென்று கொண்டிருந்த இரு குழந்தைகளை கிராம மக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.

அவர்களது பெற்றோரை வரவழைத்து குழந்தைகளை சனிக்கிழமை இரவு விசாரணைக்குப் பின்னர் ஒப்படைத்தனர். திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் அருகேயுள்ள புளியம்பட்டி கிராமத்தில், ரயில்வே கிராஸிங்கிற்காக செங்கோட்டை-மதுரை பாசஞ்சர் ரயில் சனிக்கிழமை மாலை நின்றுள்ளது. இந்த ரயிலில் ஆர்வத்தில் இரண்டரை வயது மற்றும் மூன்றரை வயதுடைய இரு குழந்தைகள் ஏறியுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில் நிலையத்தில் குழந்தைகள் இறங்கி நடந்து அத்திகுளம் கிராமத்திற்கு வந்துள்ளது. அங்கு குழந்தைகளைப் பார்த்தவர்கள் விசாரித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.

போலீஸார் இரு குழந்தைகளையும் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். விசாரித்ததில் புளியம்பட்டி வேல்சாமி மகன் மதிவாணன் (மூன்றரை) மற்றும் கருப்பசாமி மகன் லிங்கதுரை (இரண்டரை) என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீஸார் புளியம்பட்டிக்கு பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். அவர் இரவு வந்து குழந்தைகளைப் பெற்றுக் கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.